FLASH இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம்   |   ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை   |   பரிஸ்: அமெரிக்க வங்கியை குறிவைத்த குண்டுத் தாக்குதல் முயற்சி தடுக்கப்பட்டது!!   |   ஈரானின் 'சுப்ரீம் லீடர்' பதவி! வேண்டாம்-மிக்க நன்றி என மறுத்த ட்ரம்ப்! சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பு   |   தலையெழுத்தையே மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த முருகன் பாடல்   |  

இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம்

Sri சனி, 28 மார்ச், 2026 உலகம்-மத்திய கிழக்கு
இஸ்ரேல் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம்

மத்திய இஸ்ரேலின் பெய்ட் ஷமேஷ் நகருக்கு அருகிலுள்ள எஷ்டாவோல் (Eshtaol) கிராமத்தின் மீது ஈரான் நடத்திய நேரடி ஏவுகணைத் தாக்குதலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக இந்தத் தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Related
தொடர்புடைய செய்தி
ஈரானியப் புரட்சிப் படை எச்சரித்துள்ளது- மத்திய கிழக்கில் புதிய போர் முனை

இஸ்ரேல் கிராமமொன்றின் மீது ஈரான் நேரடி ஏவுகணைத் தாக்குதலில்11 பேர் படுகாயம்

ஈரானிய ஏவுகணை நேரடியாகக் குடியிருப்பு ஒன்றின் மீது விழுந்து வெடித்ததில் அங்கு பாரிய பள்ளம் ஏற்பட்டுள்ளதுடன், ஏராளமான கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக இராணுவத்தின் 'ஹோம் ப்ரொண்ட் கமாண்ட்' (Home Front Command) தளபதி ஓஹாத் மோயல் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இராணுவப் பேச்சாளர் லெப்டினன்ட் கேணல் நடவ் ஷோஷானி, எஷ்டாவோல் கிராமத்திலுள்ள ஒரு குடும்பத்தின் வீடு ஈரானிய ஏவுகணையால் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான காணொளி காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

பகிரவும்:
வாசகர் கருத்துக்கள்

இன்னும் கருத்துக்கள் இல்லை.